வீரத்தின் வேரினில் வேகம் கொண்டோம்….!
வந்தவன் எங்களின் வாசலில் நின்றுமே
சொந்த மண் ஆண்டிடுவான்
சுற்றம் இழந்தவர் சொந்தம் பிரிந்தவர்
நாம் எப்படித் துயிலுறங்க
விற்ற எம் மானம் வீதியில் உண்டு
எப்படி எடுத்துக் கொள்வோம்
செத்திடும் நிலையிலும் சுந்தரத் தமிழை
சிக்கெனப் பிடித்து கொள்வோம்
தக்கென பிழைத்தலும் தவறி நடத்தலும்
கொள்கையில் கொண்ட சிலர்
எம்மினம் தன்னில் இனியுயிர் வாழ்தலை
இனியுமே அனுமதியோம்
காலத்தில் தமிழின் கவலை தகர்த்து
கோலத்தை மாற்றி கொள்வோம்
வீரத்தின் வேரின் வெடிப்பினை கொண்டு
யாகத்தை வளர்த்து கொள்வோம்
சுழவும் தமிழன் சுற்றிய போதும்
ஆளவே நாடும் இல்லை
வீழ்வது மண்ணில் விடுதலை என்றால்
சாவதும் கேடு இல்லை…
………கவிப்புயல் சரண்….