தலைவனே உன் வீர உரை இன்றி விளக்கேற்றி தொழுகின்றோம்…!
தலைவனே உன் உரை கேளாது
கல்லறையில் உறங்கும் எம்
காவிய நாயகர்கள்
விழி நீரில் கரைகின்றார்கள்
கார்த்திகையில் இருள் சூழ
தீப ஒளியில் தேசம் மிளிர
கார்த்திகையில் தேசமே
ஒளி கொல்லுது
தலைவனே நீ எங்கே
உறவுகள் நாம் ஓடோடி வந்தோம்
கல்லறைகள் தேடியே
கார்த்திகை நாயகனே நீ எங்கே
விடுதலை கானம் ஒலிக்குது
விழி நீரில் தேசம் நனையுது
ஒப்பாரி ஓலங்கள் வான் முட்ட எழுகுது
தலைவனே உன் உரை கேளாது
கல்லறையில் உறங்கும் எம்
காவிய நாயகர்கள்
விழி நீரில் கரைகின்றார்கள்
வீர உரை இன்றி விளக்கேற்றி
தொழுகின்றோம் வீழ்ந்த எம்
வீரர்களின் கல்லறைகள் முன்னே
வீரனே தலைவனே நீ எங்கே
=சிவா TE=