விதைத்த விதைகள் முளைவிடும் முன்னிலும் பார்க்க மூர்க்கமாய்ப் போரிடும்!
மூர்க்கமாய்ப் போரிடும்!
தரையிலே களம் வென்று
கடலையும் ஆண்டு வந்தோம்
வானிலே வலம் வந்து
காற்றிலும் கலந்திருந்தோம்
நாற்படை கட்டி நின்று
நாட்டையே ஆண்டு வந்தோம்
எவன் கண் பட்டதுவோ
எதிரி தனித்து நின்று முடியாமல்
வல்லரசுகள் வலை பின்ன
வல்லூறுகள் வட்டமிட
துரோகத்தால் துளைத்தெடுத்து
கோழைகள் வெற்றியென
அறிவிப்பு!
மாவீரம் என்றைக்கும்
மரணமில்லை மனங்களிலே.
வெற்றியின்றேல் வீரமரணம்
விதையாகிப் போகின்றோம்!
விதைத்த விதைகள் முளைவிடும்
முன்னிலும் பார்க்க மூர்க்கமாய்ப்
போரிடும்!
-தமிழீழன்-