உயிரிடை என்னுள் என்றும் உணர்விடை கலந்து நின்று
தவமொடு வரமாய் வந்த விழி நிகர் மொழியே வாழி..
ஆதியாய் அதனோடு வீரமாய் அறிவினாய்
உயர்ந்து நின்று
அலை கடல் புகழின் ஒப்ப சாதனை
மொழியே வாழி..
தலை நிமிர் உணர்வில் என்றும் தமிழராய்
எம்மை மாற்றி
கவின் எழில் கலையின் உச்ச காதலின்
மொழியே வாழி..
வையகம் உள்ளளவு நெடு வானகம் நீளளவு
கையக படுத்தி உந்தன்
அகவையை ஆட்சி செய்யும் தாய் நிகர்
மொழியே வாழி
வீரியம் போர்முறையில் வெற்றியை காண்பது போல்
ஆரியம் உன்னில் வந்து அடக்கிட முனையும் போது…
மடை திறவு வெள்ளம் போல
அடை கிடவு நாகம் போல
கன்று இழந்த காளை போல
வென்ற வேந்தன் வீரம் போல
கொன்று எழுந்து பொங்கி நீயும்
வென்று எம்மில் கலந்து விடு….
கவிப்புயல் சரண்