உண்மையுள்ள ஆண்மகன்….!
தாய் ஆகாத தாயுமானவன்
தன்னிலை மாறாதவன்
தன்னையும் மறவாதவன்
தன்னையே இழப்பவன்
எதற்கும் வளையாதவன்
எதைக்கண்டும் அஞ்சாதவன்
எதற்கும் துணிந்தவன்
எக்கணமும் தயாரானவன்
சாகவும் துணிந்தவன்
சாவுக்குள்ளே வாழ்பவன்
சாவையே சுமப்பவன்
சாவுடனே போராடுபவன்
பாரத்தை தாங்குபவன்
தாரத்தையும் தாங்குபன்
தனையனையும் தாங்குபவன்
தமக்கை சுமைகளயும்தான்
உழைத்தே தேய்பவன்
ஊருக்கும் கொடுப்பவன்
பாசத்தை உணர்ந்தவன்
பற்றுக்காய் ஏங்குபவன்
உப்புடன் உண்பவன்
உண்ணாமலும் இருப்பவன்
உள்ளத்தை இழந்தவன்
ஊமையாயும் போவான்
உண்மையாயும் இருப்பவன்
ஊனையும் உறைபவன்
உறக்கத்தையும் வெறுப்பவன்
உண்மையுள்ள ஆண்மகன்
எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்.