நிமிர்ந்திட என்றே எண்ணி
பலம் தனைப் பெற்று வந்து
பறந்திங்கு பார்த்த புலிகள்
சொல் செயல் தூய்மை என்று
மனபலம் யாவும் கொண்டு
மற நிலம் வீரம் காண
உயர்ந்தன நீலப் புலிகள்
தாய்த் தலைக் குருவியதன்
இறக்கைகள் பெற்று வந்து
தமிழ் நிலம் வெற்றி கொள்ள
பறந்திட்ட தமிழ்ப் புலிகள்
வீரமே விளைந்த நிலத்தில்
சோரமே போகாப் பலத்தில்
ஈரமே உண்டு என்று மக்கள்
குடிமனை குண்டு வீசாப் புலிகள்
கடல் தரை காடு எங்கும்
கரும்புலி வீரம் சொல்ல
வான்தனில் ஏறி சென்று
வல்லமை சொன்ன புலிகள்
வாழ்கவே தமிழர் நடைகள்
வாழ்கவே தலைவன் புகழ்கள்
வாழ்கவே கந்தகப் படைகள்
வாழ்கவே வான் ஏறும் புலிகள் .
வாழ்கவே தமிழன் நிலைகள்
வாழ்கவே வாழ்க வாழ்க …..
…..கவிப்புயல் சரண்….