வீரம் வானமுலவிய நாள்…!
வானமேறி
பகைவீடதிர
தலைவன் நீதிநெறி நின்று
குண்டெறிந்தவர்….
எம் ஈழவீரர்கள் இருவர்
இன்றைய நாளில் அன்று….
உலகறிய தமிழர் வீரம்முரசறைந்தவர்கள்….
இவர்கள் எம் வானோடிகள்…..
உளிகொண்டு செதுக்கிய வரலாறல்லயிது……
வலிகண்டெழுந்த புலிவீரம்…..
தமிழர் தம் மரபதனை
உலகத்தார்க்கு
இதுவென்று
புரியவைத்த பெருந்தலைவன் வளர்த்தெடுத்த வானோடிகள் இவர்கள். …
“வான்புலிகள்” வீரமதையுணர்ந்து
பகைவீடும், அதன் உதவுநாடும் நிலைகுலைந்த காலங்கள்-என்றும்
புரட்டிப் பார்க்கப்படவேண்டிய பக்கங்கள். …
20.02.2009 அன்நாளை நினைத்து
20.02.2020 இன்நாளில்
தமிழர்களை தலைநிமிர வைத்த உங்களை வணங்குகிறோம்…….
இவர்கள் நினைவுகளால்
நிஜங்கள் என்றும் தொடர்கிறது….
சிரம்தாழ்த்தி நிற்போம்….
து.திலக்,
20.02.2020,
09:40.