கதறும் கூட்டம் ஒரு பக்கம் சிதறிய உடல்கள் மறு பக்கம்….!
நித்தம் ஒரு கொலை ரெத்தம் தான் எங்கள்
உடை கதறிய சத்தம் காதருகில் சிதறிய
மூளை கண் எதிரில் அகிலம் எங்கும்
அடிமைகள் ஓட்டம் துயில் எழும் போது
அநாதை கூட்டம் பருகினோம் விழி நீரை
தவறினோம் எங்கள் உயிரை…..!!!!
கதறும் கூட்டம் ஒரு பக்கம் சிதறிய உடல்கள்
மறு பக்கம் மானம் தரித்த பெண்கள் அவமானம்
ஈன்று ஈனர்களின் இரையாகியது அன்று வீரம்
தரித்த ஆண்கள் பொணமாகியதும் அன்று…..!!!!
குடை பிடித்து கொஞ்சி குலாவிய
மழலைகள் உடை இழந்து அனாதையானதே
அன்று….!!!!
அன்று நான் கண்டது மலை அருகில் பதுங்கிய
விழிகளும் கிடங்கு அருகில் ஒதுங்கிய பொணங்களும்
கை கொடுத்த தோழி கல்லாய் போனதே இதயம்
மாற்றிய காதலி சிதறி போனதும்
அன்று தான்…..!!!!
-லக்ஸன்-