வரலாற்று நாயகனே….!
தேசத்தின் தலைமகனே
எங்கள் பிதாமகனே!
புறநானூற்றின் பெருமகனே
ஈழத்து வேந்தா!
கலியுகத்தின் கரிகால சோழனே
தமிழீழத்தின் பிரபாகரா!
வேலுப்பிள்ளை பெற்ற மைந்தனே
வேல் கொண்ட வேலாயுதா!
தரணியெங்கும் தடம்பதித்த வீரனே
தேசத்தின் தேசத்தலைவா!
மக்கள் மனதில் இடம்பிடித்தவனே
வல்வையின் தவப்புதல்வா!
முப்படை கண்ட வீரத்திருமகனே
ஈழத்து இராவணா!
ஆதியும் அந்தமுமில்லா சோதியனே
வானத்து சூரியதேவா!
அனைத்தும் அறிந்த சகலாகலா வல்லவனே
எங்கள் தாயுமானவரே!
யாரும் அறியாத காலத்துக் கணிப்பாளனே
விடியலின் விடிவெள்ளியே!
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.