உணவில் உப்பை சேர்க்க நீ கடைசியாய் சிந்திய கண்ணீரின் ஒரு துளியை தருவாயா பெண்ணே…?
வீரமடி நீ எனக்கு
சிந்தும் குருதி நான் உனக்கு..சாமனானியடி நான் உனக்கு! சமர்களமடி நீ எனக்கு !
மறதமிழர் மரபில்வந்த மானத்தமிழர் நம்மில் பல ஆன்மையற்ற அறிவிலிகள் ..
யாரோ ஒரு நடிகனின் படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிடும் கதை அறிவாயா!அந்த ஈன நாய்களை புழுதிவாரி தூற்ற உந்தன் காலடி மண் தருவாயா? பெண்ணே !
கோடி கனவுகண்ட உந்தன் குடிகெடுத்த கூட்டம்..
இன்றும்கூட நம்மை எள்ளி நகையாடுவதை காண சகிக்காது கண்ணீர் வழிகிறது எனக்கு , உந்தன் கைக்குட்டை ஒன்றை தருவாயா? பெண்ணே..!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று இன்னுயிர் ஈந்த உந்தன் ஈகையை மறந்து வந்தேரிகளுக்கு வாழ்த்துப்பாடும் வஞ்சகர்களை பட்ட மரத்தில் கட்டி தூக்கிலிடவேண்டும் உந்தன் கூந்தல் மயிரை தருவாயா? பெண்ணே!
நீ வீரச்சாவை கட்டியணைத்ததை வெறும் சாட்சியாய் நின்று வேடிக்கை பாரத்த கோழைகள் .. இன்று சாதியாய் ,மதமாய்,கட்சியாய் ,ரசிகனாய் நாளாந்தம் கோரச்சாவு அடையட்டும்.. அவைகள் மீது தேசியகொடியாய் போர்த்த உந்தன் உள்ளாடை ஒன்றை தருவாயா?பெண்ணே!
ஆரிய காவியும் திராவிட கரியுமென நிறம்மாறிப்போன தமிழன் உடலை இனிமேலாவது கழுவி பச்சைபட்டுடுத்த
உந்தன் எச்சில்நீரை உமிழ்வாயா? பெண்ணே!!..
தமிழன் இவ்வளவு பட்டும் திருந்தவில்லை .. சூடு சொரனை ஏதுமில்லை!
இவன் உண்ணும் உணவில் உப்பை சேர்க்க நீ கடைசியாய் சிந்திய கண்ணீரின் ஒரு துளியை தருவாயா பெண்ணே?அடி ஞானப்பெண்ணே!
கனத்த இதயத்துடன்
அ.புனிதராசு
08.01.2020