மௌனம் கலைத்து மண்ணில் மறுபடி இறங்கி விடு…!
உலகம் ஒழித்து வைத்த
உணர்வை இழக்கவில்லை
கலகம் புரிய வைத்த
காரணம் மறக்கவில்லை
பிஞ்சுக் கரம் அறுத்து
பிள்ளை உடல் கிழித்த
நஞ்சர் தனை எரிப்போம்-உடன்
மௌனம் கலை தலைவா ….
அஞ்சும் பொருள் மறந்து
கெஞ்சும் நிலை கடந்து
வஞ்சம் தனை அறுப்போம்- உடன்
மௌனம் கலை தலைவா…
புத்தம் புனிதம் என்று
நித்தம் உயிர் குடித்த
யுத்தம் முடிவு செய்வோம் -உடன்
மௌனம் கலை தலைவா
பிணத்தைப் புணரும் அவன்
குணத்தைக் கண்டு இன்று
சினத்தை அடக்கி விட்டோம் -உடன்
மௌனம் கலை தலைவா.
தமிழை மறந்து கொள்ளும்
தமிழர் மத்தியிலே
உன்னை நினைந்து கொண்டு
உருகும் உள்ளம் உண்டு
மௌனம் கலைத்து எங்கள்
மண்ணில் மறுபடி இறங்கி விடு
வதனம் மறைத்துக் கொள்ளு
கவனம் கயவர் நிறைந்திருக்கு
மண்ணும் மகிழும் அந்த
மன்னன் வரவு எண்ணில்.
விண்ணும் நீர் சொரியும்-இந்த
தென்னவன் வருகை தன்னில்.. …
…..கவிப்புயல் சரண்…