நிலம் மீளப் பொங்குவோம் பொங்கல்:….!
தாயகம் தன்னை மீட்க
தமிழின மண்ணைக் காக்க
தீர்வெனும் ஈழம் கேட்டு
தீ தன்னை எரித்து கொள்ளு
மாபெரும் போர்கள் கண்டு
மாதவம் தன்னை வென்று
ஆதவன் என்று நிற்கும்
அண்ணனை எண்ணிப் பொங்கு
இழந்த நம் நிலத்தை மீட்டு
இருப்பிட மண்ணைக் கேட்டு
இறந்தவர் மீதில் சாற்றும்
இரு விழி நீரால் பொங்கு
வீழும் பொழுதெல்லாம் ஈழம்
உயிர் என்று ஈகம் தனை செய்து
வாழும் வீரர்கள் வாகை சூடி விட
நாளும் தினம் பொங்கு
ஈழம் மீள நீ பொங்கு….
….கவிப்புயல் சரண்….