முளைப்போம் மீண்டும் மீண்டும்….!
குண்டை போட்டார்
நாங்கள் குழறினோம்
யாரும் கேட்கவில்லை
எட்டி உதைத்தார்
எங்கே கதறினோம்
எவரும் வரவுமில்லை
வெட்டிச் சரித்தார்
வெம்பி அழுதோம்
வேதனை கேட்கவில்லை
குண்டைப் போட்டோம்
குழறி அழுதார்
குவலயம் குழம்பியது
எட்டி உதைத்தோம்
எகிறி விழுந்தார்
உலகம் பார்வை திரும்பியது
ஓர் நாள்
வெட்டிச் சரிப்போம்
வெம்பி அழுவார்
வேறு எவர் வந்தாலும்
ஒட்ட நறுக்கி எங்கள்
ஈழம் படைப்போம்
உலகே எதிர்த்த போதும் …
கவிப்புயல் சரண்