ஒரு படையாகுதல் நலமே….!
கொடுங் கோலென உருவாயுள கொடியோர்
களினெதிரே
சுடும் கோலென விரைவாயினி யெழுவாயிடை
தினமே
உறவாடுதலா லொரு உணர்வுமிலை யெனவே
பகையாய் தினமொரு படையாகுதல்
நலமே
எலியாநிதம் தமிழோரேனும் இழிவாநிலை
குலையும்
புலியே தினமுணர் வோடென இனிதாயுயர்
தலையும்
வலியோர்மிகு சிறியோர்தமை கொலையேபுரி நிலையும்
பலியாடென மடியாதொரு படையாகுதலு
யர்வே
தளராநிலை துணிவேயென தடமாறிடா
யினமே
உலராநிலை யுயர்வோடென உணர்வூறிய
சனமே
விலையேநிதம் சளையாதிரு விரைவாயெழு மனமே
குலையா தொரு குணமேவிய தலையாகிய
புலியே
இடியோடொரு மழையாகியே மரமாகிய
படையே
இனிமேலோரு புலியிலையென வெளி நாடகமிடுவர்
முடியாதென நிமிராதொரு முடங்கில் நிதம்
அழிவே
விடியாதொரு விரைவாயினி கிடையாகியே
கிடவே
உடனே தின மெழுவாய் படைசேர் பலம்
பெறவே
அறமே மன நிறைவாய் நடைசேர் உளம்
பெறவே
மனமே நிறை எரிவாய் கொடியோருயிர்
அழவே
களமே உயிர் பிரிவாய் வதையோருடல்
விழவே…
கவிப்புயல் சரண்