மீண்டும் ஒரு போர் எனில்….!
எடுத்த கணையது
எரி தணல் ஆகும்
எழுந்த வீரம்
எதிரியை கொல்லும்
தொடுத்த போரில்
தோள்வலி பாரும்
தடுத்த போதும்
தடையது நீறும்
ஆயிரம் படை சூழ
அணியினை காணும்
அடிமைகள் தேசம்
புது விதி காணும்
வீழ்ந்த வீரம்
மறுபடி ஆடும்
வீணர் படைகள்
வீழ்ந்தே போகும்
வெற்றி மட்டுமே
விம்பமாய் தெரியும்
தோல்வி என்பது
தோற்றே போகும்
பட்ட வலிகள்
அனுபவம் ஆகும்
பயம் அறியாது
பாசறை சேரும்
நெஞ்சினில் ஆயிரம்
குண்டுகள் பாயும்
வெஞ்சினம் மட்டுமே
பகை தனை கொல்லும்
கொடுத்த விலைகள்
கூடவே நிற்கும்
தொடுத்த போரில்
தொல்லைகள் மாளும்
எடுத்த கணைகள்
எதிரியை கொல்லும்
சிந்திய குருதியில்
ஈழமே சிவக்கும்
எங்களின் கரங்கள்
எதிரியை தாக்கும்
அழித்தவன் மண்ணில்
அழுகுரல் கேட்க்கும்
கற்பினை பறித்தவன்
கதையது முடியும்
களமுனை யாவிலும்
கரும்புகை சூழும்
தலைமையைத் தேடி
நம் போரது நீளும்
அஞ்சுதல் அகற்றியே
எம் இனம் வெல்லும்
எங்களின் மண்ணை
எம்மொழி ஆளும்.
எடுத்து சபதம் முடிக்கும்
வரையில் உறக்கம் என்பது
மரணத்தின் மடியில்…….
…கவிப்புயல் சரண்……