பொங்கிடும் கோபத்தை எப்படி போக்க ….!
பாசத் தமிழன்னை கற்பை அழித்திடுவீர்
வாசத் தாயவள் தேசம் மிதித்திடுவீர்
நேசக் குழந்தையின் தேகம் கிழித்திடுவீர்
பேசாப் பொருளாக எப்படித் தூங்கி விட
சாதிக்கு சாதி என்று திட்டம் தீட்டிடுவீர்
சங்கம் அமைத்து ஒரு சட்டம் போட்டிடுவீர்
மங்காபுகழ் அழிக்க மந்தைகள் ஆகிடுவீர்
எந்தை மண் இழந்து எப்படி துயிலுறங்க
கஞ்சா அபின் என்று காலில் விழுந்திடுவீர்
ஈழத்து ஆண்மையினை நெருப்பில் எரித்திடுவீர்
வஞ்சத்து மனம் கொண்டு சொந்தம் அழித்திடுவீர்
நெஞ்சத்து நெருப்பினை நாம் எப்படி அணைத்து விட
பொங்கிடும் கோபத்தை எப்படிப் போக்கி விட
தாங்கிடும் சோகத்தை எப்படி தீரத்து விட
வாங்கிடும் வஞ்சத்தை எப்படி வழங்கி விட
ஓங்கிடும் நெஞ்சத்தை எப்படி நீவி விட
வல்லமை ஒன்று வந்து மண்ணிடை
கருக்கொள்ளட்டும்
மகிழ்வுடன் எங்கள் வாழ்வு புயலென
உருக்கொள்ளட்டும்
சோகங்கள் நீங்கி மண்ணில் சொர்க்கமே
உருவாகட்டும்
தாகங்கள் தீர்த்த அன்னைத் தாயகம்
கருவாகட்டும்.
……….கவிப்புயல் சரண்…..