புலிக்கொடியேந்தி வா தமிழா
ஐ.நாவில் தமிழர் உரிமை
மீட்டெடுக்க
நரிகளை நம்பி ஏமாந்தது போதும்
புலிகளாய் பாய்ந்து வா தமிழா
ஐக்கிய நாடுகள் சபையில் போர் முரசொலிக்க
உரிமையை மீட்போம் வா தமிழா
பௌத்த சிங்கள பேரினவாதத்தை
ஐ.நா சபையில் சிதறடிக்க
சிறுத்தையாய் சீறி வா தமிழா
துரோகிகள் நடுங்க – கண்ணில்
கோபம் தெறிக்க
தடைகள் உடைய – தமிழீழ
மண்ணை மீட்க
புலிக்கொடி ஏந்தி வா – நாம்
அடிமைகள் இல்லை என்றே
நெஞ்சை நிமிர்த்தி வா தமிழா
அன்று – எதற்கும் துணிந்து நின்றோம்
எரிமலை பிழம்பாய் வெடித்தோம்
உரிமைக்காக துடித்தோம்
உயிரையும் மண்ணில் விதைத்தோம்
இன்று அன்னியனிடம் அடிமைப்பட்டு கிடப்பதா?
இன்றே புறப்படு ஐ.நா முன்றல் நோக்கி
உலகத்தமிழனின் கோரிக்கையை
உலகநாடுகள் வேடிக்கை பார்ப்பதா? – தமிழன்
யாரென்று காட்டிடுவோம்
ஒன்றாய் சேர்ந்து புலிக்கொடியேந்தி வா தமிழா
வேண்டும் எமக்கோர் நீதி
தமிழா உறங்காதே உண் கண்களை மூடி –
எழுந்து வா உனது
உரிமையயைத்தேடி…
நீதி கிட்டும்வரை ஓய்துவிடாதே
மாற்றான் காலில் மண்டியிடாதே
பேரினவாதத்தை தொழுது விடாதே
உரிமையை யாருக்கும் தாரைவார்த்து விடாதே
எனக்கு என்னவென கிடந்தது போதும்
தமிழா நீ உனக்குள்ளே பிரிந்து கிடந்தது போதும்
புயலாக எரிமலையாக சூறாவளியாக
சங்கத் தமிழனின் வீரத்தையும்
தேசியத் தலைவனின் கொள்கையையும்
சிரமேந்தி ஐ.நா சபை முன்றல் நோக்கி
புலிக்கொடியேந்தி ஓரணியில் இன்றே
புறப்பட்டு வா தமிழா புறப்பட்டு வா
Eelam Pugal Maran