பிறந்த நாள் தெரியாத பேரணங்கே
கரை கடல் காடேனே
தரை தோன்றா நாள் முதலில்
தான் தோன்றி ஆகிவிட்ட
தாய்த் தமிழ் பேரணங்கே..
நிதம் மெல்ல இறக்கின்ற
நிகழ் கால மொழிக்குள்ளே
பிறந்த நாள் தெரியாது
பிறந்திட்ட பேரணங்கே
உலகத்து மொழிக்கெல்லாம்
உணர்வூட்டும் ஒளியாகி
உடலுக்கு உயிராகி
ஒளிர்கின்ற ஆரமுதே
தலை போகும் நிலை வந்தும்
விலை போகாத் திறம் கொண்டு
நிலை மாறாத் திமிர் தன்னை
உடலேற்றும் தேனமுதே
உணர்வுக்கு உனை அன்றி
உரமேற்ற யார் உண்டு
உலகுக்கு மொழி தந்த
உண்மைத் தாய் தமிழே ….
….கவிப்புயல் சரண்…