பாரதி கண்டபுதுமை பெண்கள்இல்லை இவர்கள்ஈழ மண் கண்டபுரட்ச்சி பெண்கள் இவர்கள்…!
பாரதி கண்ட
புதுமை பெண்கள்
இல்லை இவர்கள்
ஈழ மண் கண்ட
புரட்ச்சி பெண்கள் இவர்கள்
பகையை பந்தாட
பாயும் புலியாக
விடுதலை களம்
நடந்திட்ட வீரத்தின்
அகரங்க ள்
தாய் தந்தை உறவோடு
கூடி வாழ்ந்திட்ட அன்பு
தமிழ் தேச விடிவிற்காய்
தானை தலைவன் வழியினிலே
நடந்திட்ட சிகரங்கள்
மங்கையின் வீரம்
மண் மீட்க்கும் போரினிலே
மடமை உலகின்
மாயயை உடைத்தெறிந்து
நிமிர்ந்த எரிமலைகள்
தேசத்தை காக்க
தேன் சிந்தும்
வண்ண கனவுகள் மறந்து
வரிப்புலி உடையோடு
வலம் வந்தனர் பெண்மை
என்னும் பெரும் பூகம்பம்
பெண்களின் எழுச்சியாய்
=சிவா TE=