பகை சுட்டெரிக்கும் பார்வை ….,
வண்ணம் போட்டுப் பறக்கும்
பட்டாம் பூச்சிகள் அல்ல இவர்கள்….
கரிகாலன் வழி வந்த நெருப்பாற்றை
கடக்கும் வீரப்புலிகள் …..
எண்ணத்தால் உயர்ந்தவர்கள்
வீர தியாகத்தில் சிறந்தவர்கள் ….
இலக்கினை நோக்கி இவர்கள்
இரவு பகலாய் நகர்ந்தவர்கள் ….
காலம் தந்த கட்டளையாய்
களம் நோக்கி பாய்ந்தவர்கள் ….
விடியல் வரும் நாளுக்காய்
விழித்திருந்து காத்தவர்கள் …
மரணமும் மண்டியிடும் இவர்கள்
போர்வீரம் பார்க்கையிலே ….
பகைவனும் பதறிப்போவான் இவர்
முன்னேறிப் போகையிலே …..
வீழ்ந்துவிடாது இவர் வீரம்
தணியாது இவர்கள் தாகம் …
பகை சுட்டெரிக்கும் பார்வையாய்
மீண்டெழுந்து நிலம் காக்கும் மாவீரம் ..
மாண்டவர் மீண்டெழுவர் ….
S Rathan Karthika