பகை அழித்து வென்று வந்த காடு
விதை பரப்பி விளைவு செய்த மண்ணில்
எங்கள் சிதை பரப்பி அழிவு செய்த பூமி
கொள்ளை கொடும் கொலைகள் தனை செய்து மெல்ல எமை கொன்றதிந்த ஆமி
உச்சி தனில் இடிகள் வந்து வீழும்
மூச்சு தனில் இரத்த வாடை வீசும்
பேச்சு தனில் தமிழ் மறந்து போகும்
வீச்சு கொண்டு சிங்களேமே பேசும்
ஆற்றுடைய நீர் நிலைகள் காயும்
வேற்றுடைய பேர் வழிகள் வாழும்
சேற்றுடைய கால் கைகள் நீளும்
தோற்றுடைய இனமாகிப் போகும்
நீட்டுபெரும் காலத்தில் நடவாது மின்னல்
கூட்டு உறவானாலும் முடியாது இன்னல்
தீட்டு பெரும் படைக்குலத்தை மண்ணில்
ஓட்டு நீ கொடுவிடத்தை காடு கடல் விண்ணில்
பகை அழித்து வென்று வந்த காடு
ஈழம் அக நெருப்பில் காத்த எங்கள் வீடு
வீசு கடல் மூசு அலை சுற்றி வந்த நாடு
பேசு பொருள் ஆகி எம்மில் வீசுகின்ற கோடு
நிலம் தன்னில் நிமிர்ந்ததெங்கள் வன்னி
வளம் உன்னிப் பிறந்ததெங்கள் சென்னி
குளம் நல்கும் நீருடையோம் மண்ணில்
உளம் நல்கும் பேருடையோம் விண்ணில்
வீரத்தை புதைக்கவில்லை நாங்கள்
விதைத்துள்ளோம் வித்துக்களை போங்கள்
சிதை உடைத்து ஒரு நாளில் கிழம்பும்
விதை பகை சரித்து புது சரிதம் எழும்பும்.
….கவிப்புயல் சரண்…..