புலிகளின் தாகம்..
புலிகள் படை கொண்டது தாகம்
அண்ணன் அணி கொண்டது வேகம்
இனமானம் காத்திட எண்ணியே
பகையை கொன்றிட்ட வேங்கைகள்
அண்ணன் பெயர் சொல்லியே
செங்களம் ஆடிய வீரமறவர்கள்
பகைவன் கொட்டம் அடக்கியே
புலிக்கொடி நாட்டிய மாவீரங்கள்
தமிழன் வீரத்தை நிலைநாட்டியே
உலகிற்கு உண்மையை உரைத்தவர்கள்
கனவிலும் தேசக்கனவை சுமந்திட்ட
தமிழீழத்தின் தேசக் குழந்தைகள்
புயலாகி புலியாகி களம் நோக்கி
புறப்பட்ட அடங்காத சிறுத்தைப்படை
உடலோடு வெடிசுமந்து சென்றிட்ட
தேசத்தில் பிறந்திட்ட அக்கினி குஞ்சுகள்
பகையை வென்றிட்ட கரிகாலனின்
தமிழ் தேசத்து கானகச் சிட்டுக்குருவிகள்
களம் வென்றே சாதனை படைத்திட்ட
தமிழீழத்தின் தேசியப் படையணி
ஈழ தீபத்தை துணிவாய் ஏற்றியே
இன வெற்றியை உறுதி செய்தவர்கள்
தானைத் தலைவன் வழியில் நின்றிட்ட
ஈழமே தீர்வென உறுதி கொண்டவர்கள்.
வரிகள்,
ஈழம் வாகீசன்