“நீயிருந்த நிலம்”
உறவைத் தேடும் பறவையாய் …
உன் வரவைத் தேடி அலைகிறேன் …
உணர்வைப் பிழியும் உன் நினைவை…
உனக்கான உயிர்த் தேசத்தில் விதைக்கிறேன் …
மீட்பார் அற்ற அடிமை தேசமாய் …
நீண்டு செல்கிறது நாட்கள் எல்லாம் ….
காப்பார் அற்று தவிக்கின்றோம் …
நீயிருந்த நிலம் நோக்கி வருவாயோ …??
எண்ணங்கள் எல்லாம் மழை நின்ற நிறங்களாய் …
வண்ணங்கள் தொலைத்தே மாய்கிறது….
திண்ணமாய் முடிவுகள் வாராது …..
மண்ணுக்குள் புதையுண்டு போகிறது ….
ஏற்றி வைத்த தீபங்கள் எல்லாம்….
ஏனோ ஒளி இன்றித் தவிக்கிறது ….
பூட்டி வைத்த காயங்கள் எல்லாம் ….
கண்ணீராய் கரை புரண்டு பாய்கிறது ….
ஈழம் தந்த உன் நினைவுகள் தானே …
காலத்தால் அழியாமல் கனக்கிறது …
வீரம் தந்த உன் வார்த்தைகள் தானே…
வீழ்ந்திடாது எம்முள் இன்றும் வாழ்கிறது …..
விடியலின் வேராகப் பிறந்தவனே …
பல கோடி விழிகள் உனக்காய் தவமிருக்கு ….
ஏங்கித் தவிக்கின்ற எங்களுக்காய் ….
எம் தேசம் தனை நோக்கி வாராயோ …??
அண்ணனின் வரவை நோக்கும்…
அன்புத் தங்கை .
றதன் கார்த்திகா.