நீண்டு வளர்ந்த நெடும்போரால் நிலம் வெடிக்கப் போகிறது…!
சுற்றி வளர்த்த மரம்
சுதந்திரமாய் வளர்கிறது
பற்றிப் பிடித்த கொடி
பக்குவமாய் நகர்கிறது
எற்றி நுரை தள்ளிக் கடல்
சுற்றி அடிக்கிறது
ஏற்று வயல்வெளியில்
ஏறு நடக்கிறது
குற்றம் எதுவும் இன்றிக்
குடல் ஏன் காய்கிறது
சுற்றம் உறவு எல்லாம்
சோர்ந்தேன் விழுகிறது
நேற்று வயல் வெளியில்
இன்று வகுப்பறையில்
நாளை வாசலிலே
புத்தன் குடி ஏறி
புது நடனம் ஆடுகின்றான்.
செத்த சாம்பல் தனை
மொத்த உடல் பூசும்
மெத்தப் பெரிய சிவன்
முகம் கொடுத்தும் பார்க்கவில்லை
மீறும் நரம்பெல்லாம் முறுக்கேறி
தாண்டவம் ஏன் ஆடவில்லை
ஒற்றைத் தலைக்கவசம்
குற்றம் அதுவென்றும்
சிங்கள நிலம்பிடித்தல்
சிறைக்கு சமம் என்றும்
பிக்கு ஒருவன் நின்று
பிளிறித் துடிக்கின்றான்
பிடரி கலங்கி விட
அடியும் தருகின்றான்
ஜெருசெலம் பெற்ற மகன்
ஜேசு எங்கே போய் விட்டான்
சிலுவை சுமந்த அவன்
சீற்றம் ஏன் கொள்ளவில்லை
குருவை அவமதித்தும்
குற்றம் ஏன் ஆகவில்லை
நம்பிக் கை தொழுது
நாற்றம் நலிந்தோங்கி
நம்பிக்கை இழந்து
நான் இங்கே எழுதுகிறேன்
ஒற்றை வரி உடையில்
சுற்றித் திரிந்த படை
மொத்தப் பெரு உலகும்
முக்கி முழித்த படை
கொற்றத் தேவியவள்
கொலுவிருந்த புலிகள் படை
இற்றை வரை இருந்திருந்தால்
இது நடக்க வாய்ப்பில்லை
இனியும் பொறுத்திருந்தால்
எலி வளையும் உனக்கில்லை
உரக்கப் பறை முழக்கி
உடலில் வெடிமுறுக்கி
கொற்றப் பெரும்தலைவன்
காவலனை கூப்பிடுங்கள்
கற்றை வரியுடுத்தி
காற்றை கையிருத்தி
நேற்று வரை அருகிருந்த
மெத்தப் பெரும் சோழன்
இற்றை வரைக்கும்
அந்த ஒற்றை மனிதன்
ஏனோ வரவில்லை
நெற்றிக் கண் திறந்து
நீசர் படை தன்னை ஏனோ எரிக்கவில்லை
கொட்டிப் பறை முழக்கி
கோலக் குரல் எழுப்பிக்
கோதையவள் மகன் என்றே
கோவலனை கூப்பிடுங்கள்
நாட்டிப் புகழ் பரப்பி
நானிலமும் கொடி நகர்த்தி
கூற்றம் அழிக்க வந்த
கூற்றுவனை கூப்பிடுங்கள்
சத்தம் அவன் காதில்
மெத்தக் கேட்க வேண்டும்
செத்தே இருந்தாலும்
செவிப்பறைகள்
அசைய வேண்டும்
நிச்சயம் வருவான்
நிலம்மீள வருவான்
நீறு பூத்த நெருப்புக்கு
முடிவொன்று இருக்காது
நீண்டு வளர்ந்த நெடும்போரால்
எங்கள் நிலம் வெடிக்க போகிறது
ஆண்டு பல கடந்தும் அண்ணன்
வருகைக்காய் அனல் கிளம்ப
போகிறது
தாண்டு போன நம் வரலாற்று
வெள்ளத்தில் மீண்டும்
நாம் மிதக்க போகின்றோம்
தோண்டு புலிப்படையை இது
மீண்டு வரும் நேரம்
நாம் ஆண்டு விடப் போகின்றோம்.
…..கவிப்புயல் சரண்..