இரகசியத்தின் இறுமாப்பு….!
என்னால் இது முடியும் என்றே
எதையும் வென்றே முடிக்கும் ஆற்றல்
அதுவே இவனின் தனி பேராற்றல்
போரை வெல்லும் சிறப்பு ஆற்றல்
தேச தலைவனின் சரித்திர நெருப்பு
வெளியே தெரியாத ஆணிவேரொன்று
கடமை தவறாத கண்ணிய வீரனிவன்
பணி முடிக்கும் வரை இவன் ஓயமாட்டான்
பகையை அழிக்கும் வரை தூக்கம் மறப்பான்
பகைவன் கோட்டையே இவனின் வாழ்விடம்
பதுங்குமே இவனின் புலி உறுமல் கண்டு
தனியே களம் செல்வான் தன் துணிவும் கொண்டு
அன்று யாழ்தேவி சென்றதும் இவனுடனே
இவன் மீண்டு வந்தான் தேச கனவுடனே
தேசத்தலைவனின் கடமை வீரனாகவே தொடரவே சிங்கள தேசம் சென்றானே
அங்கும் இங்கும் அலைந்தும் திரிந்தான்
வெற்றிக்கு வழியை தானே அமைத்தான்
அன்னை மண்மேல் காதல் கொண்டான்
தன்னையும் மறந்து வீர யாகமும் செய்தான்
வல்லூறுகளின் இருப்பிமே இவன் நெடுநாள் இலக்கு
விமானப்படைக்கு இவன் பாடமே பெரும் தகர்ப்பு
இவன் கண்ணுக்கு தெரியாத புயலான தேசக்காற்று
திட்டமிடலில் மதி நுட்பமான சுதந்திர ஒளிக்கீற்று
செல்லாது எங்கும் இவனின் பாதம் பின்னோக்கி
எதிரி களம் தேடிச்செல்லும் என்றும் முன்னோக்கி
கயவன் இறந்து பாடையில செல்வான் விண்ணோக்கி
இவன் வீரம் செல்லும் தமிழீழ மண் நோக்கி
பன்முக ஆளுமை கொண்ட பெரும் நெருப்பு
பகை எரித்திடும் விடுதலைத்தீயின் கொழுந்து
சாதனை படைத்திட்ட மண்ணின் பெரும் மாண்பு
வெற்றிகளில் அதிரடியாக இருக்கும் இவன் குறும்பு
படைத்துறையில் இவனின் மூளையே புலனாய்வு
பொட்டாய் பட்டென இருக்கும் இவனின் தீர்ப்பு
கரிகாலனின் ஆணையே எக்கணமும் தூர நோக்கு
வெற்றி என்ற ஒன்று மட்டுமே சாள்சின் இறுமாப்பு
வீரமரணத்தை தழுவ முன்னர் குறிப்பெழுதி சென்றான்
பேராபத்து வருகின்ற திசையை சரியாக கணிப்பிட்டு
களமுனையை கணக்கெடுக்கும் வல்லமை மிகு சிந்தனையாளன்
யார் அறிவுக்கும் எட்டிடாத தேசத்தலைவன் வீர குழந்தை
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்