தேசத்து தந்தையே…!
ஆதி சிவன் வழியில்
வேலனாக கருக்கொண்ட
வேலுப்பிள்ளை அவதாரம்
ஈழத்தின் ஆலமரமாக
கிளை பரப்ப பிறப்பெடுத்தது
ஈழமண்ணில் அன்று தொட்டு
தொடர்ந்தது இறுதிவரை
மூன்று தலைமுறையாக
ஒரு சேர களம் கண்டே
உலக வரலாற்றில்
தடம் பதித்த தலைமுறை
தமிழ் ஆண்ட வீரங்கள்
வல்வை முதல் பர்மா வரை
வாசம் கொண்டு வேர் விட்டே
ஈழத்தில் தடம் பதித்தே
துளிர்விட்ட ஆலமரங்கள்
தங்கத்தலைவனையும் தந்தே,
தமிழன் வீரத்தையும்
உலகறியச் செய்தவர்கள்
தமிழ் ஈழம் விட்டு
ஓடவும் இல்லை
எங்கோயோ சென்று
ஒளியவும் இல்லை
ஒரு சேரவே
மூன்று தலைமுறையே
இறுதி களத்தில் நின்ற
ஈழத்து சக்கரவர்திகள்
தமிழ் தேசத்தின்
தமிழீழத்தின்
தேச தந்தையாக
வேல் கொண்ட
வேலாயுதமாக
உயர்ந்தே நிற்பவர்.
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.