கரும்புலியாகவே வாழ்ந்த சாள்ஸ்…!
தேசத்து சுமையை சுமந்து சென்றவன்,
கரிய புலிகளுக்காகவே வாழ்ந்தவன்,
அனுதினமும் ஈழத்துக்காக வாழ்ந்தவன்,
தடைகள் உடைக்கும் ஆற்றல் மிக்கவன்,
முடியாது என்பதே இவனிடம் கிடையாது,
பகை முடிக்காது இவன் விழி உறங்காது,
கடமை ஒன்றே சாள்சிற்கு மூச்சானது,
வெற்றி அடைவது ஒன்றே இலக்கானது,
துணிவு ஒன்றே என்றும் சாள்ஸ் சிறப்பு,
சிங்கள தலைநகரே இவன் பொறுப்பு,
தாக்கும் திறனில் இருக்கும் புது வீராப்பு,
பகை அறியவில்லை இவனின் வீர முகப்பு,
என்றும் விடை காணமுடியாத புரியாத புதிர்,
விமானப்படை கொட்டம் அடக்கியே சாதனை சமர்,
தேசத்துக்கு தந்தானே மாபெரும் வெற்றியின் புகழ்,
என்றும் இம்மாவீரன் வெற்றி சொல்லுமே நம் தமிழ்,
என்னால் முடியும் என்பதே இவன் மனத்தின் வீரம்,
எங்கும் செல்வேன் எதனையும் வெல்வேன் என்பதே உறுதி,
புலனாய்வை கட்டியமைத்ததில் இருக்கும் இவன் பங்கு,
இரகசியம் காத்திட்ட தமிழீழ தேசத்தலைவனின் நெருப்பு,
எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்