தாய்ப்பால் கேட்ட எனக்கு தாயின் குருதி தந்தார்களே……!
ஈழம் எங்கும் ஏழைகள்
சத்தம் எதிரொலிக்கிறதே
எமனின் பீரங்கி சத்தம்…
கதறும் உதடுகள் எமனின்
பிடியில் இருந்து பறக்க
நினைக்கிறதே சிறகுகளாய்…
ஆடும் ஆட்டத்தில் ஓடும் விலங்குகளானோம்…
ஓட நினைக்கிறோம் இரு
கால்களால் துரத்தி வருகிறதே
அலை கடலாய் குருதி…
தாய்ப்பால் கேட்ட எனக்கு
தாயின் குருதி தந்தார்களே…