சர்வதேச மகளீர் தினத்தில் – ஈழக்கவிஞனின் கோரிக்கை
புதுவை ஐயா போற்றிய
ஈழப்பெண்ணே…
தேசியத் தலைவர் பெற்றெடுத்த
புரட்சிக் கண்ணே – எங்கே
மறந்துபோனாய் உன் வீரத்தை? – கலாச்சாரத்தை!
இல் – குடி
அங்கப்புழுவாய்
மாறிவிட்டாய் – உன்
தொல் – குடி
வரலாற்றை நீ அறிவாயா?
கழுத்தில் நஞ்சு குப்பி அணிந்து
தமிழன் விடுதலைக்கு
முன்னின்றவள் ஈழப்பெண்!
ஈழத்தை அழிக்க துடித்த சிங்களமாய்
இருந்தால் என்ன
ஈழத்தை சிதைத்த இந்தியாவாக இருந்தாலென்ன…
அன்று எதற்க்கும் அஞ்சியதில்லை ஈழப்பெண்!
அன்று போர்க்களம் முடித்து
ஈழதேசம் அமைக்க எல்லையில் களம்
அமைத்தவள் ஈழப்பெண்!
அன்று தன் விழிக்குடம் தழும்பினாலும்
சுமைக்குடம் தளும்பாமல்
ஈழச் சிசுவை ஈன்றவள் பெண்!
எப்படி மறந்து போனாய்..?
தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றை – புரட்டிப்பார்
உன் ரத்தம் தோய்த்த வரலாற்றை!
இந்திய ஏகாதிபத்தியத்தின் மார்பு துளைத்த தோட்டாவுக்கு சொந்தக்காரி
2ஆம் லெப் மாலதி..!
சுதந்திரத் தீயிற்க்காக தன்னுடலையே
தீப்பிழம்பாக்கியவள் கப்டன் அங்கையர்கன்னி..!
மேயர் சோதியாவின்
வீரத்திற்கு முன்
மண்டியிடாத வீரம் உண்டோ?
நீயே அறிந்துச் சொல்…
ஈழத்தின் எல்லை வரை வந்த சிங்கள
சிப்பாய்களின் தலைகொய்து
பிணங்களாய் செஞ்சிலுவையில்
அனுப்பி வைத்த பிரிகேடியர் துர்க்காவையும்
மறந்து விட்டாய்!
ஈழத்தின் கவசமாக நின்று ஆனந்தபுரத்தில் புயலாக சுழன்று விதையாக வீழ்ந்த பிரிகேடியர் விதுசாவையாவது நினைவு இருக்கிறதா?
அரசியல் களத்தில் உலக அரங்கை அதிரவைத்த
தமிழினியையாவது தெரியுமா?
அன்று தரை கடல் ஆகாயம்
அரசியல் இலக்கியம் வர்த்தகம்
என பல் கலைகளிலும் சாதித்த ஈழப்பெண்களையாவது இன்று தெரிகிறதா?
அந்நியத்துணி எரிப்பில்
கொழுந்துவிட்டெறிந்த
பெண்களின் வீரம்தானே
இத்தேசத்தின் அடையாளம்!
எங்கே மறைந்து போனாய்..?
நாகரீகமெனும் நாற்றத்தில்
நைந்துவிட்டாய்…
சத்தமில்லாமல் நாடுகடந்தது
உன் வீரம்…
கவர்ச்சியின் கோரப்பிடியில்
சிக்குண்டாய் உன் அங்கங்களை
விலைபேசினாய் விலை
மாதுவாய் திரிகிறாய் – வீழ்ந்தது
நீ மட்டுமல்ல…
பெண் வர்க்க உணர்வும்தான்…
எழுந்துநில்..!
உணர்ந்துகொள்..!
தெரிந்துகொள்
பெண்ணியம் மட்டுமல்ல
பெண் வர்க்க உணர்வும்
காக்கப்பட வேண்டிய ஒன்றுதான்…
இனிய சர்வதேச மகளீர்தின நல்வாழ்த்துக்கள்!.
-ஈழம் புகழ் மாறன்-