களத்தில் பூத்த காதல்
வல்லமை கொண்டு நின்ற
வைரத்தின் வாசல் திறந்தவள் நீ
எண்ணியதே இல்லை
என் எரிமலைக்கும்
பூக்கும் சக்தி உண்டு என்று
வீரத்தின் வேரில்
கட்டிய ஊஞ்சலில்
கந்தகம் ஆடுவது வழமை
ஆனால்
காந்தள் மலர் நீ
எப்படி ஆடுகிறாய்
தேசத்தின் வாசத்தை
மிஞ்சிடும் பாசம் என்
தாய்மைக்கே இல்லை
ஆனால்
உன்
தூய்மைக்குள் எப்படி
புதைந்து போனேன்
உணர்வின் உச்சமே
ஈழத்தின் சுவாசம்
உந்தன் மூச்சிலும்
பூக்கும் என் தேசம்
நம் காதல் என்பது
அழகால் அறிவால்
அன்பால் ஆசையால்
ஆன்மத்தால் அல்ல
தேசத்தின் வேரில்
அல்லவா தேங்கி
நிற்கிறது..
பகை கண்டு பணியா
பக்குவத்தின்
பரம்பரை நாம்
பயமறியா தேசத்தின்
இளவரசர்கள் அல்லவா
என் தேசக்காதலுக்கு
வலைபோடா உன்
பாசத்துக்கு மட்டுமே
என்றும் அடிமையாய்…….
கவிப்புயல் சரண்.