எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..!

In தாயக கவிதைகள்

எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..!

தமிழினத்தின் விடுதலைக்காய்
துன்ப சிலுவை சுமந்த
எங்கள் மீட்பர்களே.
மண்ணுக்காய்
மக்களுக்காய்
மரணித்த எங்கள் காவல் தெய்வங்களே..
தமிழரின் காற்று வெளியெங்கும்
நிரம்பியிருக்கும் எங்கள் மாவீரர்களே உங்கள் கனவை சுமந்து நாங்கள் நடப்போம்..

நீங்கள் கண்ட கனவை
உங்கள் லட்சியத்தை முன்னெடுக்க வல்லமை தாருங்கள் எங்கள் இனத்தின்
மீட்பர்களே..
துரோகத்தை வேரறுத்து
தோழமைகளை ஆயுதமாக்கி
விடுதலைக்காய் உழைப்போம்.
ஓ மாவீரர்களே
உங்கள் மீது உறுதி…

லெமூரியாவில் மூழ்கிப் போன எமது இனத்தின் தொன்மத்தின் வரலாற்றை..
இந்திய பார்ப்பனிய அதிகாரவர்க்கத்தால் சூறையாடப்பட்ட இனத்தின் வரலாற்று ஆவணங்களை..

மீட்டெடுக்கப்பட்ட வரலாற்று
ஆவணங்களை மீண்டும்
முள்ளிவாய்க்காலில்
நந்திக்கடலில்
விதைத்து உள்ளோம்..
எத்தனை துரோக இருள் சூழ்ந்த போதும்
ஆவண விதைகளை
விதைத்துக்கொண்டே இருப்போம்..

வரலாற்றை மீட்டெடுப்பது என்பது எங்கள் ரத்தத்தோடு கலந்து போனது..

எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..

நான் இறந்தால் என் குழந்தைகள் முன்னெடுப்பர்கள்
என் குழந்தைகள் வீழ்ந்தால்…
என் குழந்தையின் குழந்தைகள் முன்னெடுப்பார்கள்
மாவீரர்களின் வரலாறு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் அதை உங்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது..

மேவி…

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.