எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..!
தமிழினத்தின் விடுதலைக்காய்
துன்ப சிலுவை சுமந்த
எங்கள் மீட்பர்களே.
மண்ணுக்காய்
மக்களுக்காய்
மரணித்த எங்கள் காவல் தெய்வங்களே..
தமிழரின் காற்று வெளியெங்கும்
நிரம்பியிருக்கும் எங்கள் மாவீரர்களே உங்கள் கனவை சுமந்து நாங்கள் நடப்போம்..
நீங்கள் கண்ட கனவை
உங்கள் லட்சியத்தை முன்னெடுக்க வல்லமை தாருங்கள் எங்கள் இனத்தின்
மீட்பர்களே..
துரோகத்தை வேரறுத்து
தோழமைகளை ஆயுதமாக்கி
விடுதலைக்காய் உழைப்போம்.
ஓ மாவீரர்களே
உங்கள் மீது உறுதி…
லெமூரியாவில் மூழ்கிப் போன எமது இனத்தின் தொன்மத்தின் வரலாற்றை..
இந்திய பார்ப்பனிய அதிகாரவர்க்கத்தால் சூறையாடப்பட்ட இனத்தின் வரலாற்று ஆவணங்களை..
மீட்டெடுக்கப்பட்ட வரலாற்று
ஆவணங்களை மீண்டும்
முள்ளிவாய்க்காலில்
நந்திக்கடலில்
விதைத்து உள்ளோம்..
எத்தனை துரோக இருள் சூழ்ந்த போதும்
ஆவண விதைகளை
விதைத்துக்கொண்டே இருப்போம்..
வரலாற்றை மீட்டெடுப்பது என்பது எங்கள் ரத்தத்தோடு கலந்து போனது..
எதிரிகளோடு இணைந்து நிற்கும் துரோகிகளே உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது..
நான் இறந்தால் என் குழந்தைகள் முன்னெடுப்பர்கள்
என் குழந்தைகள் வீழ்ந்தால்…
என் குழந்தையின் குழந்தைகள் முன்னெடுப்பார்கள்
மாவீரர்களின் வரலாறு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் அதை உங்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது..
மேவி…