“காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்”……
26.03.2007 அன்று “தமிழீழ வானோடிகள் “
நிகழ்த்திய ஆகாய தாக்குதலின் ஆரம்ப நாள் நேற்று….
எதிரியை உலுக்கிய போராயுதம்
எம் வீரரின் உயிராயுதம்…..
எம்மவர் வான்படை
காற்றைக்கிழித்து வானேறியபோதே….
“தமிழீழ மண் “சிரமுயர்த்திக் கொண்டது……
இனி
எம்மின வாழ்வில் சினமேயில்லையென்றானது…..
ஆனால்
சீனா உட்பட பல வல்லரசு நாடுகள்
எதிரிக்கு முண்டுகொடுத்து
எம்மை அழித்திட மூச்சாய் நின்றதே
எம் அகத்திரையில் அழியாத ரணமாயானது…….
விதியோடு நோகிறோம்….
எம் விடுதலைப் பயிர் என்றோ ஒருநாள்
எம் வீரரது இலட்சிய வெறியால்
வெற்றியை பெற்றுத் தருமென….
விண்ணேகி எதிரி மண்ணதிர
போர் தொடுத்த வீரர்கள் நினைவுடன்
என்னாளும் விடியட்டும்……
து.திலக்(கிரி),
27.03.2020.