நெருக்கடிகள் சூழ்ந்தாலும்…..
நெஞ்சறையில் வாழ்வோர்…..
நேற்றைய நாளில்(26.03.2020)
அன்று நிகழ்ந்ததை(26.03.2000)
இன்று நினைவில் கொள்வோம்…..
என்றும் எம் இனத்தின் வீரமும், அற்புத தியாகங்களும் எந்தச் சூழலிலும் எம்மை திடப்படுத்தும்…..
இருபது ஆண்டுகளை எட்டியிருக்கிறது
உலக போரியல் வல்லுனர்களையே திரும்பிப் பார்க்கவைத்த “குடாரப்பு “தரையிறக்கம்…..
போர்க்காலத்தில் எதிரிகளால்
நவீனரக படைக்கலங்களினால் ஏவப்பட்ட
போர் வியூவங்களையும்,
காலத்துக்குக் காலம் வந்த இயற்கையின் மிகக் கொடிய தொற்று நோயின் பரவல்களையும்…
அதி விழிப்புணர்வோடு நின்று நிதானித்து
வெற்றிகண்ட இனமொன்றின்..
தானைத் தலைவனையும்…….
வீரத் தளபதிகளையும்…….
அஞ்சாது நெஞ்சுறுதி கொண்டு களமாடி வீரகாவியமான
மாவீரமணிகளையும்……
விடுதலையின்பால் ஒன்றித்து நின்ற போராளிகளையும்….
அளப்பெரிய தியாகங்களையும்,அர்ப்பணிப்புக்களையும்
நிகழ்த்திய போராட்ட வரலாற்றின் சக்கரமாய் சுழன்ற பேரன்புமிகு மக்களையும்……
உலக வல்லரசுகளையே மூக்கில் விரலை வைத்து சிந்திக்க வைத்த
இன் நாட்களாம் “குடாரப்பு” தரையிறக்க நாளில் பெருமிதத்துடன்
ஈழதமிழினம் நெஞ்சை நிமிர்த்தி நினைவில் கொள்வோம்……..
து.திலக்(கிரி),
27.03.2020,
10:42.