கலைவரலாற்றில் மற்றுமொரு சோகம்….
ஈழக்கலையொன்று பிரிந்ததாய்
காலையில் வந்தது செய்தி…..
தாயகப் போர்க்கலை வரலாற்றில்
இவரது கலைப்பணி அதியுயர்வு…..
வன்னிமண்ணின் பெரும்பகுதியெங்கும்
உலாவந்த கலைப்பேராளன்…..
தரணிபோற்றும் தலைமகனை தன் சிந்தையில் தினம் சுமந்த
முல்லைமண்தந்த ஜேசுதாஸ் (சாமி ஐயா)
பன்முக ஆளுமை….
பலரையும் தன் குரலோடு இணைக்கும்
நகைச்சுவை பேச்சின் நல்லதோர் நட்பாளன்…..
தன் உடல்மொழியால்
எம் ஈழ வலிசொன்ன ஈழத்து கலைக்குடும்பத்தின் “சிறப்பு நட்சத்திரம்”……
ஈடிணையற்ற பேரிழப்பு…
இவரை நோய்வாட்டி மருத்துவம் பெறுவதாய்
அண்மையில் ஒரு செய்திதானும் அறியவில்லை
திடீரென மரணப்படுக்கை சூழ்ந்ததேனோ….?
மாவீரம் போற்றி நின்ற
பெரும்
கலைவீரம் இவரின் தனிவரம்….
தற்பெருமையில்லா பெரும் கலைஞர்…
உலகத் தமிழினமே எம் ஈழத்து உணர்வுள்ள உண்மைக் கலைமகனுக்காய் சிரம்தாழ்த்தி அவர்திறன் பாடிநிற்பீர்களாக……
அகம்நிறைந்த இனிமைமிகு தருணங்களை நெஞ்சிருத்தி….
உங்கள் புகழுடலுக்கு சிரம்தாழ்த்தி நிற்கின்றோம்….
“கலையாளரின் பூதவுடல் மறைந்தாலும்
புகழுடல் என்றும் நின்று நிலைத்து மறையாது வாழும்……”
து.திலக்(கிரி),
07.02.2020,
15:45.