ஏக்கத்தில் எங்கள் மொழி
முந்தை நம் வீரம் முழுவதும் படித்திட
வந்திடு வன்னி மண்ணே
வரும் சந்ததி எம்மவர் மறந்திடு முன்னமே
எழுந்திடு தமிழின் கண்ணே
வந்திடும் பகைவன் புயலுக்கு முன்னே
புறப்படு வீரம் கொண்டு -அவன்
அங்குலம் ஆகிடும் வெங்களம் தன்னில்
பொங்கிடு கோபம் கொண்டு
சங்கம் வளர்த்த தமிழவள் அன்னையைச்
சிங்களம் ஆழுவதோ -உடல்
அங்கம் பொடிபடப் பொங்கும் குருதியில்
செந்தமிழ் மாளுவதோ
எந்தை மொழியவள் சிந்தை கலங்கிடில்
சண்டைகள் ஆயிரம் மூளும் – படை
வந்து எதிர்த்திடும் போதிலும் எங்களின்
செந்தமிழ் மங்கையே ஆளும்
ஆளும் மொழி ஒன்று அவனியில் உண்டெனில் ஆட்சியில் எம் மொழியே
வாழும் மொழியின் பெருமைகள் சொல்லியே வாழ்த்துவோம் வாருங்களே…..
…..கவிப்புயல் சரண்……..