எம் தேசத்தின் ஆசான்….!
பகை முட்டி வீழ்த்த
சினம் கொண்டெழுந்த
உறுமும் வேங்கையாய்
எழுந்த வீரத்தமிழன்
படை கண்டு தடை கண்டு
மனம் தளரா உறுதி கொண்டு
வரிப்புலி வேங்கையாகி
பகை வதம் செய்ய
புறப்பட்ட வேந்தன்
அடிமை வாழ்விற்கும்
கொடுமை வாழ்விற்கும்
அறப்போரில் முடிவுண்டு என்றே
படைகள் திரட்டியே
எமக்கு வழிகாட்டிய திசைகாட்டி
அன்பிற்கும் அறத்திற்கும்
தமிழீழ போருக்கும்
மக்களின் வாழ்விற்கும்
எம்மை நெறிப்படுத்திய
எம் தேசத்தின் ஆசான்
இருள் சூழ்ந்த வாழ்விற்கும்
தன்மான விடிவிற்கும்
இன்னல்கள் பல பட்டு
எமக்காக ஒளி தந்த பகலவன்
தமிழ் தேசிய விடிவின் நாயகன்
தமிழ் மண் காக்க வந்த காவலன்
தடை செய்த உலகெம்மை
வலம் வர செய்த தேசிய தலைமகன்
எங்கள் ஈழத்து கரிகாலன்
=சிவா TE=