எங்கே எந்தன் பிள்ளை
போராடி இருந்ததில்லை
புலியோடும் போனதில்லை
ஏரோடி தினம் மண்ணில்
பசி போக்கும் என் பிள்ளை
கதிர் மண்ணில் எழுமுன்னம்
கட்டாயம் எழுவான்
புதிர் நூறு போட்டாலே
விழி மூடி அழுவான்
வளர்ந்தாலும் அன்னைக்கு
சிறு பிள்ளை அவனே
தளர்ந்தாலும் நம்பிக்கை
தரும் வாசல் தூணே
வலி தந்த போர் முடிய
வழி காட்டி நின்றான்
புலி என்று சிங்களத்து
படை கொண்டு சென்றான்
வாரி வளர்த்தெடுத்த
வல்லமையின் அழகே
தேடித் தினம் களைத்த
தாய்மைக்கு இழவே
நிச்சயம் உண்டென்று
நிறை மனது சொன்னாலும்
எச்சத்தை மண்ணுண்டு
எருவோடு கலந்திருக்கும்
தருவாயா ஒரு முத்தம்
உயிர் போகும் முன்னாடி
வருவாயா வாசலில்
விழி மூட முன்னாடி ……….
….கவிப்புயல் சரண்…