ஆர்க்கும் நிலம் மீட்கும் புலிகள் படை….!
நிலம் மீள உருக்கொண்ட எங்கள் படை
பலம் இழந்து படுக்காது பாயின் இடை
காலம் தன் காத்திருப்பை உறுதி செய்து
பகைதனை அனுப்பும் தலைகள் கொய்து
நடுங்கும் குளிரினிலும் நம் பகைக்கு வேர்க்கும்
ஒடுங்கும் வயலினிலும் ஓடும் நதியினிலும் புலிகள் படை கிடக்கும்
வெடிக்கத் துணிந்தவர்கள்
வேகம் உடையவர்கள்
மோகம் துறந்திங்கே
மோட்ஷம் அடைந்தவர்கள்
யாகப் பெரு நெருப்பின் தேக நெய்த்துளிகள்
ஆர்க்கும் நிலம் தன்னை மீட்கும் எங்கள் படை
சேர்க்கும் தலைமுறைக்கு தீர்க்கும் ஈழக் கொடை
யார்க்கும் அஞ்சாத காந்தள் கரிகாலன் நடை
வேர்க்கும் பார் பகைக்கு இனி வரும் காலத் தமிழ்படை..
…..கவிப்புயல் சரண்…