ஆயுதம் மெளனித்ததும்
எம் வீடு வாசல் நிலம் யாவும்
ஓநாய்கள் வசமானது
ஈழ பூமியை இதயமாய் கொண்ட இனம் இன்று ஏதிலியாய்
கேட்பாரற்று கேப்பாப்புலவு
இரவும் பகலும் வீதியோரத்தில் நாம்
எம் உரிமைக்காய் அரியாசனம் ஏறியோர்
ஏசி அறையில்
தினம் பசியோடு நாமிருக்க
நாவுக்கு ருசியாய் மூவேளை அறு சுவை உணவு அங்கே
தேர்தல் வந்தால் தேடி வருவதும்
உரிமைக்கு குரல் கொடுப்பதாய்
புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க ஓடி வருவதும் புதிதல்லவே
நல்லாட்சியில் நமக்குள்
அந்தக்கட்சி இந்தக்கட்சி
இப்படிப்போயே பிரிஞ்சு
நாமெல்லாம் இழந்தாச்சு
ஒன்றுசேர திராணியில்லை
ஒன்றிணைந்தால் நம்மைப்போல் யாருமில்லை
வெட்கித் தலை குனியவேண்டிய
வெள்ளைவேட்டிகள்
இன்று வீராப்பு பேசுது
ஆதவன் இல்லையென்றெண்ணி
அடுக்கடுக்காய் குற்றம் சாட்டுது
சாவுக்கு பயந்த தரித்திரங்கள்
முப்பத்தி நான்காண்டு சரித்திரம் பேசுது
கரிகாலன் காலம் பற்றி கலங்கம்பேசுது
ஓட்டுப் போட்ட கரங்கள் மீண்டும் வலுவானால் எம் வலி விலகும்
எம் நிலத்தில் நாம் வழி கிடைக்கும்
எல்லைக்காய் போராடியோர் இல்லையென வீட்டுக்குள் இருக்க வேண்டாம் ஓரணியாய் அணிதிரள்வோம் கேப்பாப்புலவுக்கு வாருங்கள்.
#மன்னார் பெனில்