*பிரபாகரம் தமிழ்மக்களுக்கு மட்டுமானதன்று அது முழு உலகத்துக்குமான இயங்கு சக்தி*
ஒரு காலத்தில் மாவீரன் சேகுவேரா திவிரவாதி என அமெரிக்கா கூறிக்கொண்டு நயவஞ்சகமாக துரோக ஆயுதத்தால் சாகடித்தது. பின்னாட்களில் அதே அமெரிக்க மக்கள் உட்பட புரட்சியின் குறியீட்டு நாயகனாக உலகமக்களால் பார்க்கப்பட்டார் இன்றும் பார்க்கப்படுகின்றார்.
அதேபோன்றுதான் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரு காலத்தில் பயங்கரவாதியாக வல்லாதிக்க சக்திகளாலும் ஆதிக்க சக்திகளாலும் பார்க்கப்பட்ட தலைவர் இன்று 21ஆம் நூற்றாண்டின் கதா நயகனாக, சிறந்த தலைவனாக, சிறந்த போராளியாக, சிறந்த மக்கள் காப்பானாக, சிறந்த போர் தளபதியாக, சிறந்த போராட்ட ஆசானாக, சிறந்த விடுதலை வீரனாக, சிறந்த ஒழுக்க சீலனாக, இன்னும் பல கோணங்களில் உலக மக்களால் மட்டுமல்ல வல்லாதிக்க சக்திகளாலும் பார்க்கப்படுகின்றார் போற்றப்படுகின்றார்.
ஒரு காலத்தில் இதே இந்திய இந்துதுவ ஆதிக்கம் தான் தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என கூறியது ஆனால் இன்று தலைவரையே சிறந்த காப்பாளனாக அவர்களை அறியாமலே கொண்டாடுகிறார்கள்.
மேலும் பாலஸ்தீன விடுதலையாக இருக்கட்டும், குர்திதிஸ்தான் விடுதலையாக இருக்கட்டும், இந்தியாவில் காஷ்மீர் விடுதலையாக இருக்கட்டும், பஞ்சாப்பிய விடுதலையாக இருக்கட்டும் இந்தியாவில் புரட்சிகர எந்தவொரு மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி அங்கே ஒடுக்கப்படும் மக்களின் குரலாக தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனை விடுதலை தோட்டாக்களாக தெறிக்கும்.
அதேவேளை 2020ஆண்டு தொடக்கத்தில் சீனா தனது இராணுவ வீரர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறுத்தை படையணி பயன்படுத்திய சீருடையை அதே பாணியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் பிரித்தானியா விடுதலைப்புலிகளின் தமிழன் கைக்குண்டை இந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது
மேலும் இதே வருடம் அமெரிக்க களச்சண்டை பெண்கள் அணியை விடுதலைப்புலிகளின் பாணியில் உருவாக்கியுள்ளது.
அத்தோடு ஈரான் கடற்படை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் உருவாக்கிய குருவி அதிவேக விசைப் படகை கொப்பி அடித்து உருவாக்கியுள்ளது.
அத்தோடு வடகொரியா விடுதலைப்புலிகளின் சண்டியன் சாரை போன்ற ஏவுகனைகளை கொப்பியடித்து அணுவாயுத ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனையும் செயல்வடிவமும் உலக நாடுகளுக்கு ஏற்றால்போல் போராளியாக, இராணுவ ஆசானாக, விடுதலை வீரனாக, ஒடுக்கப்படும் மக்களின் குரலாக, பலவீனமான மக்களின் பலமாக விசாலமடைந்து செல்கின்றது ஆனால் அதே கருவில் உருவான தமிழர்கள் சரியாக பயன்படுத்துகின்றோமா என்பதே கேள்வியாக விரிகின்றது ?!…
✍️ஈழம் புகழ் மாறன்.