வந்துபாடு… வானமேறு…
வரிக்கோடிட்ட வான்கலங்கள் வாரியள்ளி அனல் கொட்டப்போயின பகைமீது,
சரிக்குச்சரி நிகராய் தழிழர் தலைநிமிரச்
சரித்திரத்தை எழுதிவைத்துச்
சங்கமித்துப்போன தடமிது…
வேர்களை அரித்துக்கொண்டோடிய போர்வெள்ளத்தில் சாயாது நின்று
தரித்துநின்ற பகையின் தலைக்குமேல் பறந்து அவர்க்குக் கொடுத்த உச்சியடியிது
இலங்கேச இராவணனின் புட்பகவிமானம்
இதிகாச புராணங்களாய் ஏட்டில்கிடக்க,
அடங்காத தமிழனின் தேசக்கனவுகள்
மெய்ப்படும்வண்ணம் வானேறிக்கடந்த வரலாறிது…
கலங்கா வீரர்கள் கண்ணியம் தெரியக்
கடைசி நிமிடங்களும் கடமைகளாக…
காலங்களும் நின்றாடும் தமிழர் பெருமையைச் சிரித்தபடி சிரித்திரனும்,
சிந்தனைத் திறம் படைத்த ரூபனும்
கட்டியணைத்த தலைவன் பெயரைப்
பகையுச்சியில் பொறித்துப் போயினர்பார் எங்கள் வானமும் அன்றே எங்களின் வசப்பட்டது…
-காந்தள்-