குப்பியோடு வாழும் புலிமறத்தி…!
பட்டுச்சேலை கட்டி வாடாமல்லி சூடி
வீதியிலே நான் நடந்தால்
பார்த்து ரசிக்கும் ஆண்மகன்களே
இன்று
போருருடை தரித்து கனத்த ஆயுதத்துடன்
காவலரணில் கண்விழித்துக் காத்திருக்கிறேன்
எதிரியை இலக்கு வைத்து
நீங்கள் பார்த்து ரசிக்கும்
அழகு மங்கையாய் அல்ல
நீங்கள் புரட்டிப் படிக்கும்
வரலாற்றுப் புதுகையாய்
தாலிகட்டும் கழுத்தில்
இலட்சியத்துடன் என் சாவினையும்
இணைத்தே அடைத்த குப்பியை
தாலியாய் கட்டிக்கொண்டவள்
தாலி பெண்ணிற்கு வேலி என்பார்
நான் கட்டிய தாலி
என் இனத்திற்க்கே வேலியானது
நாளை சண்டையில் சாகலாம்
ஒருவேளை குப்பிகடித்தும் சாகலாம்
என்றும் சாகாத என் இலட்சியமும்
இயக்கத்தின் கமுக்கமும்
குப்பித்தகட்டின் வழியே
உங்களை வந்துசேரும்
என்னைப் போல்
நாளை நீங்களும் குப்பியை
கட்டிக்கொள்வீர்கள்.
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.