பதுங்கு குழியினுள் இருந்து ஒரு குரல்…..
மலைபோல இருப்பொண்டு
கண்டோம்
தனியாத கனவொன்று
கொண்டோம்…
அத்தனையும் பாழாய் போச்சு
நேற்று அயலான் எறிந்த
நெருப்பில் நீறாய்போச்சு
இடப்பெயர்வுகள் எங்கள்
வாழ்வாகிப் போச்சு
வறுமை எங்கள்
வரமாகிப் போச்சு
காயங்கள் சுமந்து வந்தோம்
தூரங்கள் கடந்து வந்தோம்
பல இடங்களில் தங்கி வந்தோம்
மரநிழலில் பொங்கியும் வந்தோம்
நேற்று
முற்றத்து மணலில்
நிலவின் அழகை
இரசித்திருந்தோம்
இன்று
பதுங்கு குழியினுள்
சாவுக்கஞ்சி
யுத்தசாமத்தின்
விடிவுக்காய்
விழி நொந்திருந்தோம்
மண்குளிர வானமகள்
மழைபொழிந்த மண்ணில்
மற்றான் வீசிய நச்சுக்
குண்டுமழை நடுவே
உடல்கருகி சாகிறோம்
இரவும் பகலும்
இங்கே ஒன்றாய் போனது
நீள்வானை நச்சுப்புகை
சூழ்ந்து கொண்டது
பக்கத்தில் தான் இராணுவம்
பாய்ந்து வந்து எங்கள்
உயிர் பறிக்க காத்திருக்கான்
நடுவே
கப்பரணாய் எங்கள்
களப்புலிகள் வேலியாய் நின்று
எம்மை காத்தருள
தீப்பிடித்து எரிகிறது
எங்கள் தாய்நிலம்
ஓலமிட்ட அழுகையொலி
விண்ணை உடைத்து
தேவர்களின் காதைக்கிழிக்குது
இங்கே
ஊமையாய் கிடக்கது
உலகம்
உறக்கத்தில் கிடக்குது
தாயவளின் சொந்தம்
இந்த அவலம்
என்று மறையும்
இனிதான நாளும்
வந்துகூடாத
காத்திருக்கிறோம்
பதுங்கு குழியினுள்….
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.