துரோகம் வென்ற கடற்புலிகள்…
முப்படை கட்டிய சோழனுக்குப் பின்
நாற்ப்படை கட்டிய தலைவன்
கரிகாலசோழனின் தம்பியே
கிட்டு எனும் நாமம் கொண்ட புலியே
நிலத்தில் நிறுத்தினோம் வீரத்தை
பகைவன் நிலைகுழைந்து போனான்
கடலிலே கடல்புறா பயணங்கள்
போகையில்
போராளிப் பிள்ளைகளின் தாயானவன்
ஈழக்கடலின் தளபதியே
வங்கத்தில் நீ மூட்டிய தீ
எங்கள் நெஞ்சத்தில் மூளுதைய்யா
இந்தியக் கோட்டான்களின்
துரோகமும்
சிங்களத்துப் பேய்களின்
வஞ்சமும்
வீழ்ந்துபோனது
உன் தியாகத்தின் முன்னால்
தோற்றுப்போனது
நீ காலம்கடந்தும்
ஈழத்து நெஞ்சங்களில் வாழ்வாய்
துரோகம் வென்ற கடற்புலிகளின்
தளபதியாய்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.