பகைக் கண் தனை வீழ்த்திப் புலி
நடைகள் இடுமே..
மழைவெள்ளம் வந்திங்கு காலை நனைக்கும்
கொடுவெயில் வந்தாலே தலையே வெடிக்கும்
கடல் தன்னில் அலையோடு உடலும் பறக்கும்
காடுகளில் படும் சன்னம்
உயிரும் தெறிக்கும்
சில வேளை செல் பட்டு உயிர் போகலாம்
சில நேரம் சிதறலாய் உடல் மாறலாம்
ஐஞ்சிஞ்சி விழுந்தங்கே அணி சாகலாம்
கஞ்சிக்கும் வழியின்றி களம் ஆகலாம்
பாயின்றி நோயிலே பலர் மாளலாம்
மருந்துக்கு வழியின்றி விழி மூடலாம்
கிபிர் வந்து முன்னரங்கு தூள் ஆகலாம்
நிமிர்கின்றவேளையிலேதலைபோகலாம்
அரவங்கள் தீண்டியும் நாம் மாளலாம்
திரவங்கள்வெளியேறிப் பிணம் ஆகலாம்
உருவங்கள் மாறி எம் உடல் போகலாம்
புருவங்கள் புடைத்திங்கு உயர் சாகலாம்
கைக்குண்டுபட்டு எங்கள் கால் போகலாம்
கரும்புகை வந்தெங்கள் கண் போகலாம்
இரும்புகள் வந்தெங்கள் உடல்தாக்கலாம்
தழும்புகள் உடல் எங்கும் வாழ்வாகலாம்
ஆயிரம் துன்பங்கள் அலை மோதலாம்
அதை விட கொடுமைகள் நாம் காணலாம்
ஆயினும் புலி வாழ்வு மகிழ்வானது
அதை தேடி தினம் எங்கள் மனம் போகுது
நாய் உண்ணும் நிலை எங்கள் தமிழன் நிலையோ
நடுக்கடலில் மிதப்பதுவும் தமிழன் பிணமோ
இடுக்கண் தனைக் களையப்புலி அணிகள் எழுமே
பகைக் கண் தனை வீழ்த்தி படை
நடைகள் இடுமே..
கவிப்புயல் சரண்.