இனி இருள் விலகும்……….
கனவுகள் சுமந்து
நினைவுகள் ஏற்றி
நீண்டதொரு இலக்குடன்
வெற்றிக்காய் காத்திருக்கிறோம்
பார்வதித்தாய் மகன் தந்த வீரம்
எங்கள் நெஞ்சங்களில்
உரமேறிக் கிடக்கிறது
மாலதியின் போர்திறனும்
அங்கயற்கண்ணியின் விடுதலைத்தீயும்
எங்கள் விழிகளில்
பற்றி எரிகிறது
சங்கரின் தியாகமும்
மில்லரின் கோபமும்
எங்கள் கனவுகளை
உயிர்பெற செய்கிறது
அந்தோ தெரிகிறது
எங்கள் தேசத்தின் ஔிக்கீற்று
இனி விடியல் காண
வீறுடன் போரிடவோம்
எங்கள் தாயவளின்
கனவுகளை நனவாக்கி
எங்கள் தேசத்தில்
வெற்றிக் கொடியை நாட்டுவோம்.
படைப்பு – நாகதேவன் தமிழீழம்.