என்ன செய்யப்போகிறாய்
தமிழினமே….
அன்னம் மறந்து அனுவனுவாகி
தன்னை இழந்து-தமிழ்
மண்ணை நினைந்து
உருகுதோர் அடங்கா நெருப்பு
என்ன செய்யப்போகிறாய்
தமிழினமே
இன்னும் கண்ணை மூடி
கனவு காணப்போகிறாயா
பின்னால் நின்று
அன்னை புகழை மட்டும்
ஆசைதீரப் பாடப்போகிறாயா
பெண்ணெணும்
பெருந்தீயொன்று
உயிர்பற்றி
எரிகின்றது அங்கே
தமிழா
உன் பேரெழுச்சி எங்கே
துண்டுபட்ட தமிழினமே
ஒன்றுபடு
குண்டுமழையில்
குழித்த இனமே ஒன்றுபடு
ஒன்றுபடு தமிழா
உன்பலத்தை காட்டு
உலகமே வியக்கட்டும்
ஓர் திட்டத்தை தீட்டு.
த.யாளன்