போர்வெறிகொண்ட புத்தனின் தேசம்
எங்கள்
ஊர்புகுந்தழித்தது…..
முள்ளிவாய்க்கால் பேரவலம்
என்பது
சொல்லி அழுதிடவோ எழுதிடவோ
முடியாத
பெருந்துயரத்தின் உச்சம் அது
ஓரினத்தின் உயிரெடுத்து
உதிரம் குடிப்பதற்காய்
பேரினவாத பேய்கள் நடாத்தி
முடித்த
கோரத்தாண்டவம்……..
நந்திக்கடல் சிவந்த நீரால்
பொங்கி வழிந்தது
சிங்களம் அதில் படகேறி
சிரித்து மகிழ்ந்தது
எங்கள் இனத்தின் அழிவும்
அழுகையும்
வங்கக் கடலுடன் கரைந்நு
போனது…எம்
சொந்த தேசம் சிங்கள வெறியில்
சிதைந்து போனது………..
போர்வெறிகொண்ட புத்தனின்
தேசம்…. எங்கள்
ஊர் புகுந்தழித்தது
வேர் முதல் கிளை வரை
வேறுபாடின்றி வெட்டி எறிந்து
வீரம் பேசியது…உலகம்
வேடிக்கை பார்த்தது
பாவப்பட்ட உலகத்தின் கோரமுகத்தில்
ஏகப்பட்ட சந்தோசம்…….
எரிந்து கொண்டிருந்த
தேசத்தில்
விழுந்து கருகிக்கொண்டிருந்தது
எம் இனத்தின் எண்ணற்ற
உயிர்கள்
பல்லாயிரம் ஆண்டு பழம்பெருமை
கொண்ட பெரு விருட்சம்
மெல்ல மெல்ல சரிந்து
வேரறுந்து சாய்ந்தது ……..
மனிதம் பேசிய தேசங்கள்
அனைத்தும்
புனிதம் தொலைத்து பொறுமை
காத்தது
குருதிக் கடலில் குளித்துக்
கொண்டிருந்த..எமது இனத்தின்
அழிவில்
விழித்துக் கொண்டே தூங்கின……
சிந்திய குருதியும் கண்ணீரும்
எங்களை உசுப்பேற்றும்..கொடிய
சிங்களம் ஒருநாள் நிட்சயம்
பதில் கூறும்
காலம் மிகவும் கனதியானது
கையறு நிலையில்
எமது இனம் விட்ட கண்ணீர்
ஆழிப் பேரலையாக ஆர்ப்பரித்து
அரக்க்களைத்தேடி
ஊழித்தாண்டவம் ஆடத்தொடங்கி
விட்டது….எம்மை
ஓட ஓட விரட்டிக் கொன்றவன்
இன்று
உயிருக்குப் பயந்து
ஓடி ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறான்…..
இறந்து போன என் இனத்து
உறவுகளின்
சிரிப்பின் ஒலி ..இன்று என்
செவிகளில் கேட்கிறது
வலிகள் தாங்கி வாழும் உயிர்களின்
காதில் ஒருவகை
கானம் கேட்கிறது……..
கவிஞர் ஆவூர்க்குமரன்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13ம் ஆண்டு நினைவாக….