நாங்கள் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…

In தாயக கவிதைகள்

“நாங்கள் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்”

எங்கள் பாதைகள் நெடுகப்
பள்ளங்கள் மேடுகளையும் தாண்டி…
வலிகளையும் ரணங்களையும் கடந்தபடி…
குருதியாற்றில் நீந்தி நிமிர்ந்தபடி…
நாங்கள் தொடர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…

எங்களுக்கான பாதைகளை
நாமே அமைத்தபடி…
எங்களுக்கான வாசல்களை
நாமே திறந்தபடி…
எங்களுக்கான வாழ்வை
நாமே வடிவமைத்தபடி…
நாங்கள் எழுந்து நடக்கத்
தொடங்கிவிட்டோம்…

வலியைத் தந்தவரை விடவும்
வல்லமை மிக்கவராய்…
வாழ்வைப் பறித்தவரை விடவும்
வரம்பெற்றவராய்…
வலுவிழந்து வீழ்த்தப்பட்டவர்
வரலாறைச் சுமந்தவராய்
நாங்கள் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…

எங்கள் குரல்களில்
வலிமை சேர்த்தபடி
எங்கள் உரிமைக்காய்
ஓங்கி ஒலித்தபடி…
எங்கள் வேற்றுமைகளைக்
காலால் உதைத்தபடி,
எங்களுக்காய் ஒரு விதி செய்ய…
கைகள் கோர்த்து
நடக்கத் தொடங்கிவிட்டோம்…

விண்ணைத்தொட்டும்
மண்ணைத்தொட்டும்
வித்தைகள் பல பயின்று
விடுதலை நெஞ்சில் சுமந்தபடி…
சந்ததி கடந்தும் சொந்தமண்
மறவா சோதரர் ஒன்றாய்த் தமிழராய்…
நாங்கள் சேர்ந்து நடக்கத்
தொடங்கிவிட்டோம்…

காலம் வழிநடத்தக் கடல்கடந்து
ஞாலம் முழுதும் பரந்தபடி…
ஓலம் தந்த வாழ்வில் ஒளியேற்றிப் புதுக்
கோலம் கொண்டு நிமிர்ந்தபடி…
காலம் வெல்லக் காத்திருக்கும்
ஈழத்தமிழராய் இன்று
நாங்கள் விரைந்து நடக்கத் தொடங்கிவிட்டோம்…

-காந்தள்-

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.