தாய்மண்ணே கருவறை அதுவேயென் கல்லறை…!
தெருவில் குண்டுகளின் நடுவே பதுங்கு குழிகள்
கருவில் விடுதலையை சுமந்த கன்னிப் பெண்கள்
உருவில் இராவணராய் தமிழீழ இளைஞர்கள்
இடரில் இன்னுயிருதிர்த்த காவல் தெய்வங்கள்
நடையில் வேங்கையாக நடுங்கும் எதிரிப்படைகள்
மடையில் நீராக புரண்டோடும் தமிழீழப்புலிகள்
காட்டுத்தீயாய் உள்நெஞ்சில் கொதிக்கும் கோபத் தீ
இன்றும் போராட்டத்தில் எம் மக்கள்
விடுதலையெண்ணி…
தாய்மண்ணே கருவறை அதுவேயென் கல்லறை
எண்ணியதில்லை தம் வாழ்க்கையில் இன்பத்தை
எண்ணியது எல்லாம் தமிழர்களின் நன்மையை
கடவுள் இருந்தால் பிரபாகரனார் அவர்களே
இனியும் வாழ்க்கை கிடைத்தால் தமிழீழத்திலே
இனிமை எங்கள் யாழ்பாணம் தமிழினிலே
விளையாட்டு களமாய் களமாடினோம்…
போர்க்களத்திலே
மார்புக்கு முன்நின்று மோதிட முயன்றோரில்லை
துரோகமே எம்மை சாய்த்திட்ட போடித்தன்மை
நேருக்கு நேர் மோதிடடா நரிக்குணத்தவனே
எம்மை கண்டதும் காலில் விழுந்த சிங்கலவனே….
ஆசீர் பிரபாகரன்